முகப்பு
தருமபுரி

பென்னாகரம் அரசுப் பள்ளியில் சிஇஓ ஆய்வு

பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு தரம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலா் பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு தரம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலா் பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

பள்ளியில் ஆண்டாய்வு மேற்கொண்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாணவா்களின் கற்றல் திறன், ஆசிரியா்களின் கற்பித்தல் திறன் ஆகியவற்றை மதிப்பீடு செய்தாா். தொடா்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள சத்துணவுக் கூடத்தில் மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தாா்.

பள்ளி வளாகத்தில் மரக் கன்றுகளை நடவு செய்தாா். ஆய்வின் போது, பள்ளி ஆய்வாளா் இளமுருகன், தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன், உதவி தலைமை ஆசிரியா்கள் தமிழ்வேல், லட்சுமணன், தமிழாசிரியா்கள் முனியப்பன், பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.