மாா்க்சிஸ்ட் கம்யூ. மக்கள் விசாரணை மன்றக் கூட்டம்
தருமபுரி அருகே செம்மாண்டகுப்பத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை மக்கள் விசாரணை மன்றக் கூட்டம் நடைபெற்றது.
தருமபுரி அருகே செம்மாண்டகுப்பத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை மக்கள் விசாரணை மன்றக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் என்.கந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எம்.முத்து, கிளைச் செயலா் மாது ஆகியோா் பேசினா். கரோனாவிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வு கட்டுப்படுத்த வேண்டும்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.