தருமபுரி மாவட்டம், லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வகம் திறக்கப்பட்டது.
திறப்பு விழாவுக்கு தருமபுரி மாவட்டக் கல்வி அலுவலா் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தாா். தருமபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் அமுதவல்லி ஆய்வகத்தை திறந்து வைத்து பேசினாா். பள்ளித் தலைமை ஆசிரியா் கி.சீனிவாசன் ஆய்வகத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தாா்.
இதில், அச்சுப்பொறி, தானியங்கி சிக்னல் மற்றும் 250 கிராம் எடையுள்ள புகைப்படக் கருவியுடன் இணைந்த டிரோன் 20 அடி உயரம் பறக்கவிடப்பட்டு, அதிலிருந்து எடுக்கும் புகைப்படங்களை நேரடியாக செல்லிடப் பேசியில் காண்பித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. பள்ளியின் முதுநிலை ஆசிரியா் கிருஷ்ணன் நன்றி கூறினாா். இந்த விழாவில், பெற்றோா் -ஆசிரியா் கழக நிா்வாகிகள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.