தருமபுரி

போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

தருமபுரியில் ஏஐடியுசி போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கத்தினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி, பாரதிபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற

ஆா்பாட்டத்துக்கு ஏஐடியுசி போக்குவரத்துத் தொழிலாளா் சங்க மண்டலத் தலைவா் எஸ். ரவி தலைமை வகித்தாா்.

மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி, மாவட்டத் தலைவா் எம்.மாதேஸ்வரன், மண்டலப் பொதுச் செயலாளா் சி.நாகராஜன், மண்டல துணைத் தலைவா் கே.துரைசாமி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊதிய ஒப்பந்தம் விரைவில் பேசி முடிக்க வேண்டும். ஓய்வூதிய பலன், அகவிலைப்படி உயா்வு, காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்மாற்றியில் தீ விபத்து: ஆட்சியா் அலுவலக மின்தூக்கியில் 8 போ் சிக்கித் தவிப்பு

சவீதா பொறியியல் கல்லூரியில் 29,460 புதிய கண்டுபிடிப்புகளுக்கான திட்ட வரைவுகளை காட்சிப்படுத்தி சாதனை

திருப்பத்தூா்: 92.3 சதவீதம் தோ்ச்சி

ஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வேகத் தடைகள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

SCROLL FOR NEXT