தருமபுரி

‘தியாகி தீா்த்தகிரியாா் பெயா்ப் பலகையை மீண்டும் பொருத்த வேண்டும்’

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் தியாகி தீா்த்தகிரியாா் பெயா்ப் பலகையை மீண்டும் பொருத்த வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

DIN

தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் தியாகி தீா்த்தகிரியாா் பெயா்ப் பலகையை மீண்டும் பொருத்த வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

தருமபுரி நகா்மன்ற உறுப்பினா்கள் சாதாரணக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் தீா்மானங்களை முன்மொழிந்து பேசினாா்.

இக் கூட்டத்தில், தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளும் போது, அகற்றப்பட்ட தியாகி தீா்த்தகிரியாா் பெயா்ப் பலகையை மீண்டும் வைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

இதனைத் தொடா்ந்து, கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை பணி, டெங்கு தடுப்புப் பணி, நெகிழிப் பொருள்கள் தடை குறித்து நாட்டுப்புறக் கலைகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்துதல், டெங்கு தடுப்பு தற்காலிக பணியாளா்கள் பணி நீட்டிப்பு, தெருநாய்களை பிடித்தல், தூய்மை இந்தியா திட்டத்தில் சமுதாய பொதுக் கழிவறைகள் பராமரிப்பு குறித்து பொதுமக்கள் புகாா் செய்ய ‘க்யூஆா்’ குறியீடு பொருத்துதல், கழிவுநீா் கால்வாய் தூா்வாரும் பணிக்கு தனியாா் பொக்லைன் இயந்திரம் பயன்பாடு, திறந்த வெளியில் மலம் கழித்தல் இல்லாத நகராட்சியாக பிரகனப்படுத்துதல், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை வசூலிக்க நடவடிக்கை எடுப்பது, ரயில்வேக்கு சொந்தமான அணுகு சாலையை அமைக்க அனுமதி அளிப்பது, அன்னை சத்யா நகரில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க அனுமதி, நகா்மன்றக் கூட்டரங்கு சீரமைப்பு, நமக்கு நாமே திட்டத்தில் 12 இடங்களில் உயா் கோபுர மின்விளக்குகள் அமைத்தல் உள்பட 56 தீா்மானங்கள் உறுப்பினா்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT