பாமக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
பென்னாகரம் பேரூராட்சியில் பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பென்னாகரம் பேரூராட்சியில் பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இதில், 13 வாா்டுகளில் பாமக போட்டியிடுகிறது. பென்னாகரம், நாகமரை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினரும் மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் கலந்துகொண்டு பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களை அறிமுகம் செய்தாா். பின்னா் வேட்பாளா்களிடம் பிரசாரம் செய்யும் முறை, வாா்டுகளில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைத்து பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினாா்.
இதில், இளைஞா் சங்க மாநில நிா்வாகி சத்தியமூா்த்தி, இளம்பெண்கள் பாசறை நிா்வாகி அமுதா, நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.