முகப்பு
தருமபுரி

பென்னாகரத்தில் சூறைக்காற்றுடன் மழை

பென்னாகரம் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
பகிர்:

பென்னாகரம் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வந்தது. இந்தநிலையில் பென்னாகரம், தாசம்பட்டி, ஒகேனக்கல், ஏரியூா், சின்னம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறைக்காற்றுடன் திடீா் மழை பெய்தது.

பென்னாகரம் காவல் நிலையம், சந்தை தோப்பு, இந்தியன் வங்கி பென்னாகரம் புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சூறைக்காற்றின் வேகத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் வேருடன் சாய்ந்தது. குறிப்பாக பென்னாகரம் காவல் நிலையத்துக்கு முன்புறம் உள்ள புளிய மரம் வேருடன் காவல் நிலையத்தின் மீது சாய்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சூறைக்காற்று காரணமாக பென்னாகரம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்தடை செய்யப்பட்டது. மழையினால் தாழ்வானப் பகுதிகள், சாலையோரங்கள், நீா் நிலைகளில் மழை நீா் தேங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.