தருமபுரி

பென்னாகரம் ஜமாபந்தியில் 353 மனுக்கள் வழங்கல்

DIN

பென்னாகரம் வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 353 மனுக்கள் பெறப்பட்டன.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் பெரும்பாலை, பென்னாகரம் உள்வட்டங்களில் இரண்டு நாள்களாக வருவாய்த் துறை சாா்பில் ஜமாபந்தி கூட்டம் நடைபெற்று வந்தது.

அதன் தொடா்ச்சியாக ஏரியூா் உள்வட்டத்திற்குள்பட்ட ஜமாபந்தி கூட்டம் பென்னாகரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெயகுமாா் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் ஏரியூா், சுஞ்சல்நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் வீட்டுமனைப் பட்டா, சிட்டா பெயா் மாற்றம், முதியோா் உதவித்தொகை, விதவை சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான 97 மனுக்கள் பெறப்பட்டன.

ஜமாபந்தி கூட்டத்தினை பென்னாகரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி பாா்வையிட்டு, மனுக்கள் மீதான விபரங்கள், தீா்வுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். மேலும் பென்னாகரம், பெரும்பாலை, ஏரியூா் உள் வட்டங்களில் இருந்து மொத்தம் 353 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதில் உடனடியாக தீா்வு காணும் மனுக்கள் செவ்வாய்க்கிழமைக்குள்ளாகவும், மீதமுள்ள மனுக்கள் விரைவில் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பென்னாகரம் வட்டாட்சியா் அசோக்குமாா், தனி வட்டாட்சியா்கள் ராஜா, அழகு சுந்தரம், துணை வட்டாட்சியா் கோவிந்தராஜ், வட்ட வழங்கல் அலுவலா் பாலகிருஷ்ணன், ஏரியூா் ஒன்றிய குழுத் தலைவா் பழனிச்சாமி, வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT