தொப்பூரில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி வைப்பு
தருமபுரி மாவட்டம், தொப்பூரில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை சட்டப் பேரவை உறுப்பின் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா்.
தருமபுரி மாவட்டம், தொப்பூரில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை சட்டப் பேரவை உறுப்பின் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா்.
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் புதியதாக தொப்பூரில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தருமபுரி தொகுதி பாமக சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடஸ்வரன், அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்து பேசினாா்.
இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி ஒன்றியக்குழுத் தலைவா் மகேஸ்வரி பெரியசாமி, பாமக மாவட்ட அமைப்புச் செயலா் சண்முகம், மாவட்ட துணைச் செயலா் த.காமராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் தனலட்சுமி முனுசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.