தருமபுரி

இஸ்லாமிய இயக்கங்களின்கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

கா்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து அரூரில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் என்.சுபேதாா் தலைமை வகித்தாா்.

கா்நாடக பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு கா்நாடக உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உயா்நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை ரத்து செய்ய வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலா் எம்.ஜைனுல் ஆபிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலாளா் ஜெ.காதா்பாஷா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளா் ஏ.குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT