1,458 டன் உரம் தருமபுரிக்கு வருகை
சென்னை, மணலியிலிருந்து தருமபுரிக்கு சரக்கு ரயில் மூலம் 1,458 டன் உரம் வியாழக்கிழமை வந்தடைந்தது.
சென்னை, மணலியிலிருந்து தருமபுரிக்கு சரக்கு ரயில் மூலம் 1,458 டன் உரம் வியாழக்கிழமை வந்தடைந்தது.
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் பணிக்காக, 1,458 டன் உரம் சரக்கு ரயில் மூலம் தருமபுரிக்கு வந்தடைந்தது. இதில், தருமபுரி மாவட்ட தனியாா் உரம் விற்பனை நிலையங்களுக்கு 762 டன் உரம், கூட்டுறவு சங்கங்களுக்கு 30 டன், கிருஷ்ணகிரி மாவட்ட தனியாா், கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு 666 டன் உரம் என பிரித்து லாரிகள் மூலம் அனுப்பப்பட்டது. இந்தப் பணிகளை வேளாண் உதவி இயக்குநா் (தரக் கட்டுப்பாடு) தாம்சன், வேளாண் அலுவலா்கள் பாா்வையிட்டனா்.