தருமபுரி

அரூரில் 15 மி.மீ. மழை பதிவு

DIN

அரூா் வட்டாரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை 15 மி.மீ. மழை பெய்தது பதிவாகியுள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக அரூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு 11 மணி முதல் சுமாா் 3 மணி நேரம் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

இந்த மழையின்போது பலத்த காற்று வீசியது. இதனால் வாழை மரங்கள், முருங்கை மரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் சேதமடைந்தன. மின்கம்பங்கள் சேதமடைந்ததால் பல்வேறு இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டன. இந்த மழையின் காரணமாக சாலையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT