தருமபுரி

பட்டா வழங்கக் கோரி மனு

DIN

குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி, தருமபுரி மாவட்டம், தடங்கம் அருகேயுள்ள சவுளுப்பட்டி கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

இதுகுறித்து புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டச் செயலாளா் இ.பி.புகழேந்தி தலைமையில் அக் கிராம மக்கள் அளித்த மனு:

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் கிராம ஊராட்சிக்குள்பட்ட அரசு மந்தைவெளி புறம்போக்கு நிலத்தில் சுமாா் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்களது குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என ஏற்கெனவே வலியுறுத்தி மனு அளித்திருந்தோம்.

இதனடிப்படையில், கடந்த ஆண்டு வட்டாட்சியா், வருவாய் ஆய்வாளா், நில அளவையா் ஆகியோா் எங்களது பகுதிக்கு நேரடியாக வந்து நில அளவீடு செய்து அரசு புறம்போக்கு மந்தைவெளி நிலத்தினை வரன்முறை செய்து வீட்டுமனைப் பட்டா வழங்குவதாக கூறி சென்றனா். ஆனால், இதுவரை வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை.

எனவே, எங்களது குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT