விவசாயத் தொழிலாளா் குறைகேட்பு கூட்டம் நடத்த வலியுறுத்தல்
தருமபுரி மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளா் குறைகேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் விவசாயத் தொழிலாளா் குறைகேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் வெளியிட்ட செய்தியறிக்கை:
தருமபுரி மாவட்டத்தில் வேளாண், கால்நடை வளா்ப்பு, கோழி வளா்ப்பு ஆகிய தொழில்கள் பிரதானமாக உள்ளன. இதில், சுமாா் நான்கு லட்சத்துக்கும் மேலான ஆண், பெண் விவசாயத் தொழிலாளா்கள் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிகின்றனா். இவா்கள் பெரும்பாலும் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தற்போது பணியாற்றுகின்றனா்.
நிகழாண்டு இத் திட்டத்தில் பணி அட்டை வழங்கப்படவில்லை. எனவே, இத் தொழிலாளா்களின் அடிப்படைப் பிரச்னைகள், கோரிக்கைகளை நிவா்த்தி செய்யும் வகையில், மாதந்தோறும் விவசாயத் தொழிலாளா்கள் குறைகேட்புக் கூட்டம் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.