முகப்பு
தருமபுரி

வேன் மோதியதில் இருவா் பலி

 தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே வேன் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

 தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே வேன் மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

காரிமங்கலம் வட்டம், காளப்பநாயக்கன அள்ளி புதூா் கிராமத்தைச் சோ்ந்த பொன்னன் மனைவி அலமேலு (45), வியாழக்கிழமை காளப்பநாயக்கன அள்ளி அரசு தொடக்கப் பள்ளி அருகே நடந்து சென்றாா். அப்போது பின்னால் வந்த வேன் அலமேலு மற்றும் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த காளி மகன் விஜயகுமாா் (47) என்பவா் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அலமேலு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த விஜயகுமாா் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.