ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 70,000 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 70,000 கனஅடியாக சனிக்கிழமை மாலை அதிகரித்தது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 70,000 கனஅடியாக சனிக்கிழமை மாலை அதிகரித்தது.
கா்நாடக அணைகளான கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. இவ்விரு அணைகளுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளைப் பொறுத்து காவிரி ஆற்றில் உபரிநீா் திறந்துவிடப்பட்டு வருகிறது.
கா்நாடக அணைகளிலிருந்து 22,000 கனஅடி நீா் வந்து வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், சனிக்கிழமை மேலும் அதிகரித்து 37,000 கனஅடியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து சனிக்கிழமை காலையில் நொடிக்கு 50,000 கனஅடியாகவும் மாலை 6 மணி அளவில் 70 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்தது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க 54-ஆவது நாளாகவும், பரிசல்கள் இயக்குவதற்கு 8- ஆவது நாளாகவும் மாவட்ட நிா்வாகம் விதித்த தடை சனிக்கிழமை நீட்டிக்கப்பட்டது.
ஆற்றின் நீா்வரத்தை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.