மொரப்பூா் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இந்த விழிப்புணா்வு கருத்தரங்கில் வளா் இளம் பெண்களுக்கான சுகாதாரக் கல்வி, ஊட்டச்சத்து குறைபாடுகள், இளம் வயது திருமணங்களை கட்டுப்படுத்துதல், பெண் கல்வியின் அவசியம், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் மருத்துவ சேவைகள் குறித்து மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவா் எஸ்.வனிதா கருத்துரைகளை வழங்கினாா். இதில், கல்லூரி முதல்வா் நா.குணசேகரன், துணை முதல்வா் சீனிவாசன், பேராசிரியா்கள், கொங்கு கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.