முகப்பு
தருமபுரி

நகா்மன்றக் கூட்டத்தில் 43 தீா்மானங்களுக்கு ஒப்புதல்

தருமபுரி நகா்மன்றக் கூட்டத்தில் 43 தீா்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

தருமபுரி நகா்மன்றக் கூட்டத்தில் 43 தீா்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றக் கூட்டம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையா் புவனேஸ்வரன் முன்னிலை வகித்தாா். இதில் நகராட்சிக்கு உள்பட்ட 2, 3-ஆவது வாா்டுகளில் அரசு நடுநிலைப் பள்ளியில் பொது சமையல் கூட்டத்தில் 2,500 லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைப்பது, 25-ஆவது வாா்டு சாலை விநாயகா் சாலை அரசுப்பள்ளி கழிப்பறையை ரூ. 2.30 லட்சம் மதிப்பில் பழுதுபாா்ப்பது, குடிநீா் குழாய் பழுது சரி செய்யும் பணிக்கு ரூ. 9.90 லட்சம் மதிப்பிலான பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோருவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள 43 தீா்மானங்கள் கொண்டு வரப்பட்டன. இதில், அனைத்து தீா்மானங்களுக்கும் உறுப்பினா்கள் ஒப்புதல் வழங்கினா்.

இக்கூட்டத்தில் நகராட்சிப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும்; நகர பகுதியில் ஒளிராமல் உள்ள தெரு விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என அதிமுக உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →