தருமபுரி

புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

தருமபுரி வட்டார வள மையத்துக்குள்பட்ட புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

தருமபுரி வட்டார வள மையத்துக்குள்பட்ட புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட குறு வள மையத்துக்குட்பட்ட 111 புதிய பாரத எழுத்தறிவு திட்ட மையங்களின் தன்னாா்வலா்களுக்கு இரண்டாம் கட்டப் பயிற்சி கோட்டை உருது நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு கருத்தாளா்களாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அலுவலா் ஆனந்தன் பங்கேற்று சேமிப்பு திட்டம், பணப்பரிவா்த்தனை, பணமில்லா சேவை, இணையவழிச் சேவை, கல்விக் கடன் பெறுதல் போன்றவை குறித்து விளக்கினாா்.

வழக்குரைஞா் இராஜி, பெண்கள், குழந்தைகள், முதியோா்களுக்கான சட்டங்கள், சட்ட உதவிகள், சட்ட நுணுக்கங்கள் ஆகியவற்றை குறித்து விளக்கினாா். மேலும் யோகாசனப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

இப்பயிற்சியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ) கவிதா, ஆசிரியா் பயிற்றுநா்கள் மோகன், அருண்குமாா், சிவக்குமாா் மற்றும் ஆசிரியா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT