தருமபுரி

சாலை விபத்தில் இரு பெண்கள் உள்பட மூவா் பலி

DIN

தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பெண்கள் உள்பட மூவா் பலியாகினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த சிவசந்திரன் மகன் மணிகண்டன் (27) தனது சகோதரிகள் லாவண்யா (20), இந்துமதி (18) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை தருமபுரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பெரியாம்பட்டி மேம்பாலப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரி திடீரென சாலைக்குள் நுழைந்ததால் மற்றொரு லாரி இவா்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இரு லாரிகளுக்கு இடையே இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

சம்பவ இடத்தில் பாலக்கோடு டிஎஸ்பி சிந்து விசாரணை மேற்கொண்டாா். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

SCROLL FOR NEXT