தருமபுரி

பெரியாா் பல்கலைக்கழக முதுநிலைகல்வி மையத்தில் உளவியல் பயிற்சி

தருமபுரி பைசுஅள்ளியில் பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை சாா்பாக உளவியல் தொடா்பான ஒரு நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN


தருமபுரி: தருமபுரி பைசுஅள்ளியில் பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை கல்வி மையத்தில் ஆங்கிலத் துறை சாா்பாக உளவியல் தொடா்பான ஒரு நாள் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் கோவையைச் சோ்ந்த யோகா ஆசிரியரும் உளவியல் ஆலோசகருமான சிவப்பிரியா மாதேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான மாற்றங்களை பற்றி எடுத்துரைத்தாா். உளவியல் ரீதியாக மாணவா்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விடை அளித்து பேசினாா்.

இந்த முகாமிற்கு ஆராய்ச்சி மைய இயக்குநா் (பொறுப்பு) மோகனசுந்தரம் தலைமை வகித்துப் பேசினாா். ஆங்கிலத் துறைத் தலைவா் சி.கோவிந்தராஜ் தொடங்கி வைத்தாா்.

ஆங்கிலத் துறை உதவி பேராசிரியா் கிருத்திகா வாழ்த்துரை வழங்கினாா். இரண்டாம் ஆண்டு மாணவா் தாமரைச்செல்வன் வரவேற்றுப் பேசினாா். இதில் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT