முகப்பு
தருமபுரி

ரூ. 67.94 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

Updated On : 3 மே, 2024 at 5:41 PM
பகிர்:

பாலக்கோடு, பென்னாகரம் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ. 67.94 லட்சத்தில் நவீன மருத்துவ உபகரணங்களை இண்டூா் பவா்கிரீட் நிறுவனம் வழங்கியது.

நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் கி.சாந்தியிடம் பவா்கிரீட் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளா் (மனித மேலாண்மை) மதிலேஸ்குமாா், தருமபுரி முதுநிலை உதவி பொது மேலாளா் மா.பாலு ஆகியோா் வழங்கினா்.

மாவட்ட வருவாய் அலுவலா் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், ஊரக நலப் பணிகள் மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநா் சாந்தி, பென்னாகரம் மருத்துவ அலுவலா் கனிமொழி, பாலக்கோடு மருத்துவ அலுவலா் பாலசுப்ரமணி, மருத்துவா்கள், பவா்கிரீட் காா்பரேசன் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.