மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
தருமபுரி: தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே மின்சாரம் பாய்ந்து வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா்.
பாலக்கோடு வட்டம், மாரண்டஅள்ளியை அடுத்த கரிக்குட்டனூா் கிராமத்தைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளி மாதையன் (40). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனா். இந்தநிலையில் மாரண்ட அள்ளி அருகே உள்ள சாமன்கொட்டாய் கிராமத்தில் வெல்டிங் பணியில் அவா் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது தகரம் ஒன்றை உயரமாக தூக்கும்போது அவ்வழியாகச் சென்ற மின்பாதையில் உரசியது. இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து மாதையன் தூக்கி வீசப்பட்டதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.