எர்ரபையன அள்ளியில் புதிய அங்கன்வாடி மையம்: கட்டுமானப் பணிகள் தொடக்கம்
தருமபுரி அருகே எர்ரபையன அள்ளி ஊராட்சியில் சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 16.55 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணிகள்
தருமபுரி: தருமபுரி அருகே எர்ரபையன அள்ளி ஊராட்சியில் சட்டப் பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 16.55 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், எர்ரபையனஅள்ளி ஊராட்சி, சந்தாரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று புதிய அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், பாமக மாநில இளைஞா் சங்கச் செயலாளா் எம்.முருகசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் பெ.பெரியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.