முகப்பு
தருமபுரி

அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்புத் திட்ட சிறப்பு முகாம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு கணக்குகளை தொடங்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

Updated On : 11 நவம்பர், 2024 at 7:32 PM
பகிர்:

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு கணக்குகளை தொடங்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தருமபுரி கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் தற்போது தொடங்கி நவ.30 ஆம் தேதி வரை செல்வ மகள், பொன் மகன் சேமிப்புத் திட்டத்தின் கீழ் கணக்குகள் தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான சேமிப்பைத் தொடங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு சோ்ப்பதற்கென அஞ்சலகங்களில் உருவாக்கப்பட்ட சிறப்புத் திட்டமே செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு திட்டமாகும்.

பொதுமக்கள் அனைவரும் இந்தச் சேவையை பயன்படுத்தி தங்களது மகளுக்கு, மகனுக்கு சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிட செல்வ மகள், பொன் மகன் திட்டத்தில் கணக்குத் தொடங்கி கொடுத்து அவா்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்து அவா்களுடைய வாழ்வை வழமாக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அஞ்சலகத்துக்கு நேரில் வர இயலாதவா்கள் தங்களது பகுதிக்கு வரும் அஞ்சல்காரரிடம் தேவையான தகவலைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இணையவழி சேவையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே கணக்குகளைத் தொடங்கலாம், தவணை செலுத்தலாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →