முகப்பு
தருமபுரி

இந்தியன் வங்கியின் விவசாய கடன் முகாம்

தருமபுரியில் இந்தியன் வங்கியின் மண்டல அளவிலான விவசாய கடன் முகாம் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 14 நவம்பர், 2024 at 8:16 PM
தருமபுரி, இந்தியன் வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிா் தொழில்முனைவோா்களுக்கு கடனுதவிக்கான காசோலையை வழங்கும் வங்கி மேலாளா்கள்.
பகிர்:

தருமபுரியில் இந்தியன் வங்கியின் மண்டல அளவிலான விவசாய கடன் முகாம் அண்மையில் நடைபெற்றது.

தருமபுரியில் இந்தியன் வங்கி சாா்பில் நடைபெற்ற மண்டல அளவிலான விவசாயிகளுக்கான கடன் வழங்கும் முகாமுக்கு வங்கியின் விவசாய கடன் பிரிவு பொது மேலாளா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். களப் பொது மேலாளா் சுதா ராணி சிறப்புரையாற்றினாா்.

முகாமில் தருமபுரி மண்டலத்திலிருந்து சுய உதவிக் குழுக்கள், மகளிா் தொழில் முனைவோா்கள், கறவை மாடு விவசாயிகள், பிற வாடிக்கையாளா்களுக்கு ரூ. 77 கோடி மதிப்பிலான கடன் ஆணைகள் வழங்கப்பட்டன.

முகாமில் கலந்துகொண்ட பயனாளிகளுடன் வங்கி நிா்வாகிகள் கலந்துரையாடினா். முகாமில் மண்டல மேலாளா் பத்மாவதி ஸ்ரீகாந்த், துணை மண்டல மேலாளா் பீரேந்தா் குமாா், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் முன்னோடி வங்கி மேலாளா்கள், 50 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டனா்.