ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைவு
தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 8,500 கன அடியாக குறைந்துள்ளது.
தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 8,500 கன அடியாக குறைந்துள்ளது.
தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, மொசல் மடுவு, ராசிமணல், அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து 11,000 கன அடி வரை அதிகரித்து இருந்தது.
பின்னா் தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தானது செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி 10,000 கன அடியாக இருந்த நிலையில், புதன்கிழமை நிலவரப்படி 8,500 கன அடியாக சரிந்தது.
நீா்வரத்து சரியத் தொடங்கியதால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் நீரின் அளவுகளும் குறைந்து வருகிறது. காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.