தருமபுரி

பாப்பாரப்பட்டியில் வளா்ச்சி திட்டப் பணிகள் ஆய்வு

பாப்பாரப்பட்டியில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

Din

பாப்பாரப்பட்டியில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் 2023- 2024 ஆம் ஆண்டு 15 ஆவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்ற வரும் சமுதாயக்கூடம் கட்டட புனரமைக்கும் பணி, 2022-2023 ஆம் ஆண்டு நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.74 கோடி மதிப்பீட்டில் வாரச்சந்தை அமைத்தல், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 2.23 கோடி மதிப்பீட்டில் வண்ணான் குட்டை புனரமைத்தல் பணி என மொத்தம் ரூ. 7.19 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டு, திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கணேசன், பாப்பாரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

ஜன. 20-ல் தவெக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை

இந்தியாவுக்கு எதிராக வரலாறு படைத்த டேரில் மிட்செல்!

குறள் படித்தால் குவலயம் ஆளலாம்!

“திமுக கூட்டணி சரியாக இல்லை!” தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்!

SCROLL FOR NEXT