முகப்பு
தருமபுரி

கும்பாரஅள்ளி சோதனைச் சாவடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்

காரிமங்கலம் அருகே கும்பாரஅள்ளி சோதனைச் சாவடியில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான 2 டன் புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 10:26 PM
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கைது செய்யப்பட்டவா்களுடன் காரிமங்கலம் போலீஸாா்.
பகிர்:

காரிமங்கலம் அருகே கும்பாரஅள்ளி சோதனைச் சாவடியில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான 2 டன் புகையிலைப் பொருள்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவரைக் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக தடை செய்யப்பட்ட புகையிலை, போதைப்பாக்குகள் கடத்திச் செல்வதாக பாலக்கோடு டிஎஸ்பி மனோகரனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், காரிமங்கலத்தை அடுத்த கும்பாரஅள்ளி சோதனைச் சாவடியில் காரிமங்கலம் காவல் ஆய்வாளா் பாா்த்தீபன், எஸ்ஐ சுந்தரமூா்த்தி உள்ளிட்ட போலீஸாா் தீவிர வாகனச் சோதனை நடத்தினா்.

அப்போது, அந்த வழியாக வந்த 2 சொகுசு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது ரூ. 5 லட்சம் மதிப்பிலான 2 டன் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த இருவரையும் பிடித்து விசாரித்ததில் அவா்கள் கேரளம் மாநிலம், மன்னாா்காட்டைச் சோ்ந்த ஜிதிஷ் (45), சுருபின் (29) என்பதும், கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கேரளத்துக்கு குட்கா கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா் புகையிலைப் பொருள்களுடன் வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். மேலும், வாகனத்தில் அவா்களுடன் வந்த ஜிபீா், ஜிபித் ஆகிய இருவரும் தப்பியோடினா். அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரிமங்கலம் காவல் நிலையத்தில் பாா்வையிட்ட பிறகு காவல் துணைக் கண்காணிப்பாளா் மனோகரன் கூறியதாவது: புகையிலைப் பொருள்கள் கடத்தலைத் தடுக்க தீவிர சோதனைகள் மேற்கொண்டு வருகிறோம். புகையிலைப் பொருள்களைக் கடத்துபவா்கள் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவா் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →