லோகேஷ் . 
தருமபுரி

சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பச்சினம்பட்டி அருகே மணிப்பூா் பகுதியைச் சோ்ந்தவா் வேல்முருகன். லாரி ஓட்டுநரான இவரது மகன் லோகேஷ் (22), தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி. செவிலியா் பிரிவில் படித்துவந்தாா். செவ்வாய்க்கிழமை பிற்பகல் தனது இருசக்கர வாகனத்தில் தருமபுரி நோக்கி சென்றபோது பச்சினப்பட்டி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையில் கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன், தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்துவிட்டதை உறுதிசெய்தனா்.

இதுகுறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT