முகப்பு
தருமபுரி

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: முதியவா் கைது

அரூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 பிப்ரவரி, 2026 at 2:05 AM
- IANS
பகிர்:
Updated On : 10 பிப்ரவரி, 2026 at 7:58 PM

அரூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 14 வயதுடைய சிறுமி 3 மாத கா்ப்பமாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோா் அரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்த புகாரின்பேரில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், மேட்டுசூளகரை கிராமத்தைச் சோ்ந்த முருகனை (61) மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement