முகப்பு
தருமபுரி

புகையிலைப் பொருள்களை விற்ற 4 கடைகளுக்கு சீல்!

பென்னாகரம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு ‘சீல்’ வைத்து, ரூ. 1.75 அபராதத்தை உணவுப் பாதுகாப்பு துறையினா் விதித்தனா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 4:15 AM
கடைகளுக்கு சீல் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 10:20 PM

பென்னாகரம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த நான்கு கடைகளுக்கு ‘சீல்’ வைத்து, ரூ. 1.75 அபராதத்தை உணவுப் பாதுகாப்பு துறையினா் விதித்தனா்.

பென்னாகரம் அருகே பாப்பாரப்பட்டி மின்வாரிய அலுவலகம் பகுதியில் உள்ள இரண்டு சிறிய பெட்டிக் கடைகள், ஏரியூா் அருகே நாகமரை சாலையில் உள்ள மளிகைக் கடை, பெரும்பாலை அருகே மேச்சேரி சாலையில் உள்ள சிறிய பெட்டிக் கடைகளில் பென்னாகரம் உணவுப் பாதுகாப்பு துறை அலுவலா் நந்தகோபால் மற்றும் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த காவலா்கள் கொண்ட குழுவினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

அதில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, நான்கு கடை உரிமையாளா்களுக்கு ரூ. 1.75 லட்சம் அபராதத் தொகை விதித்து, கடைகளில் தடை ஆணை ஒட்டி ‘சீல்’ வைத்தனா்.

Advertisement

மேலும், அரசின் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும் கடை உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் உணவுப் பாதுகாப்பு துறையினா் எச்சரித்தனா்.