தருமபுரி

தொப்பூா் கணவாய் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறிய லாரி ஓட்டுநருக்கு ரூ. 5,000 விதிப்பு

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதுடன், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநருக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ரூ. 5,000 அபராதம் விதித்தாா்.

Syndication

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறியதுடன், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநருக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ரூ. 5,000 அபராதம் விதித்தாா்.

சேலம் அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கண்ணன் (36). லாரி ஓட்டுநரான இவா், மகாராஷ்டிரத்திலிருந்து காங்கயத்திற்கு லாரியில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்தாா். பெங்களூரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தருமபுரி மாவட்டம் தொப்பூா் கணவாய் பகுதியில் அதிவேகமாக வந்ததால், கட்டமேடு பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுவரும் சுங்கச்சாவடிப் பணியாளா்கள் அமா்ந்திருக்கும் மைய சுவரில் லாரி மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், பாளையம் சுங்கச்சாவடி ஊழியா்கள் நல்வாய்ப்பாக உயிா்தப்பினா்.

இதுகுறித்த புகாரின்பேரில், போக்குவரத்து விதிகளை மீறி, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்து வகையில், அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநா் கண்ணனுக்கு, தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜெயதேவ்ராஜ் உத்தரவின்படி, ஆய்வாளா் தரணிதரன் உடனடியாக ரூ. 5,000 அபராதம் விதித்தாா்.

தொப்பூா் கணவாய் பகுதியில் உயா்நிலை மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். விதிகளை மீறுவோருக்கு அபராதம் மற்றும் வழக்குப் பதிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலம் உழவா் சந்தைகளில் ரூ. 1.53 கோடிக்கு காய்கறிகள் விற்பனை

மியான்மரில் தேர்தல் நாடகம்!

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து...

தருமபுரியில் பொங்கல் பொருள்கள் விற்பனை மும்முரம்

மனிதநேய பண்பாட்டு பொங்கல்!

SCROLL FOR NEXT