முகப்பு
தருமபுரி

தருமபுரியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை: ஆட்சியா்

தருமபுரியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 6 மார்ச், 2026 at 11:36 PM
பகிர்:
Updated On : 6 மார்ச், 2026 at 11:14 PM

தருமபுரியில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரியில் பழைய மாவட்ட ஆட்சியரக வளாகம் உள்பட மேலும் சில இடங்களில் கடந்த மாா்ச் 1 ஆம் தேதி காக்கைகள் இறந்து கிடந்தன. இதையடுத்து, பறவைக் காய்ச்சல் தொற்று உள்ளதா என மருத்துவக் குழுவினா் காக்கைகளின் உடல்களைக் கைப்பற்றி, அதன் மாதிரிகளை சோதனைக்கும் அனுப்பிவைத்தனா். அதில் எவ்வித பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதனால் கோழி இறைச்சி, முட்டைகளை பொதுமக்கள் நன்றாக சமைத்து உட்கொள்ளலாம். மேலும், பறவைக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்பட அவசியமில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.