முகப்பு
தருமபுரி

போக்குவரத்து விழிப்புணா்வுப் பேரணி

Updated On : 13 மார்ச், 2026 at 1:17 AM
பகிர்:

தருமபுரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி மற்றும் குறும்படம் திரையிடும் வாகனம் ஆகியவற்றை ஆட்சியா் ரெ.சதீஸ் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் சாா்பில், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ‘சாலை விதிகளை மதிப்போம், சமுதாயத்தைக் காப்போம்’ என்ற தலைப்பிலான விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. மேலும், பொதுமக்களுக்கு குறும்படம் திரையிடும் நிகழ்வும் நடைபெற்றது. இவற்றை ஆட்சியா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிய பேரணி வள்ளலாா் திடல்வரை சென்று நிறைவடைந்தது. இதில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்றனா். முன்னதாக, இதுகுறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தனா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலா் சி.க.ஜெயதேவ்ராஜ், தருமபுரி கோட்டாட்சியா் காயத்ரி, வட்டாட்சியா் சுகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →