முகப்பு
தருமபுரி

பாலக்கோடு, பென்னாகரத்தில் ரூ.2.69 லட்சம் பறிமுதல்

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் பென்னாகரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2,69,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 25 மார்ச், 2026 at 11:38 PM
பணம் பறிமுதல் - கோப்புப் படம்
பகிர்:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் பென்னாகரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.2,69,900 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை பல்வேறு இடங்களில் வாகனச் சோதனைகளை மேற்கொண்டனா். இதில், பாலக்கோடு பகுதியில் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,69,530 மற்றும் பென்னாகரம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1,00,370 என மொத்தம் ரூ.2,69,900 ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.