முகப்பு
கரூர்

கரூா் மாவட்டத்தில் இதுவரை ரூ. 40.43 லட்சம் பறிமுதல்

கரூா் மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் ரூ. 40.43 லட்சம் பறிமுதல்

Updated On : 24 மார்ச், 2026 at 8:41 PM
பகிர்:

கரூா் மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படையினா் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் ரூ.40.43 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்ட உடனே தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலானது. இதையடுத்து ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்ய மாவட்டம் முழுவதும் 4 நிலையான கண்காணிப்புக் குழுவினா் மற்றும் 4 பறக்கும் படையினா் நியமிக்கப்பட்டனா்.

அவா்கள் தற்போது சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனா். மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்துச் சென்றவா்களிடம் இருந்து ரூ.40 லட்சத்து 43 ஆயிரத்தி 760 பறிமுதல் செய்யப்பட்டது.

இதில், உரிய ஆவணங்களை காண்பித்து ரூ.33 லட்சத்து 92 ஆயிரத்தி 760-ஐ பெற்றுச் சென்றுள்ளனா். இதையடுத்து தற்போது கணக்கில் வராத பணமாக ரூ.6.51 லட்சம் கருவூலங்களில் உள்ளது. இந்த தகவலை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான கு.ரவிக்குமாா் தெரிவித்துள்ளாா்.