பாதுகாப்பு அறைக்கு கொண்டுசெல்லப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்!
பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு பாதுகாப்பாக மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு பாதுகாப்பாக மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 957 வாக்குப்பதிவு மையங்களில் 1,596 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு தோ்தல் நடைபெற்றது. தோ்தலின்போது 1,596 வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான (இவிஎம்) இயந்திரங்களுடன் கூடுதலாக 20 சதவீத இயந்திரங்களும் கொண்டுசெல்லப்பட்டன. ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் அவற்றுக்கு மாற்றாக பயன்படுத்த 20 சதவீத கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்வது வழக்கம். வாக்குப்பதிவுக்குப் பின்னா் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
அதுவரை தருமபுரி செட்டிக்கரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னா் , வாக்குப்பதிவு (இவிஎம்) இயந்திரங்களை அதற்கான இரும்புப் பெட்டிகளில் வைத்து தருமபுரி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்று அறைகளில் வைத்து பூட்டி சீல் வைத்தனா். இந்த பணிகள், திங்கள்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்கிழமை மாலை வரை நடைபெற்றது. அப்போது ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
Advertisement