கிருஷ்ணகிரி அருகே லாரி மீது கார் மோதியதில் கேரள மாநில இரும்பு வியாபாரி நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு அருகே உள்ள மன்னார்காட்டைச் சேர்ந்தவர் முகமது பஷீர் (41). இரும்பு வியாபாரியான இவர், பாலக்காட்டைச் சேர்ந்த உமர் (40) என்பவருடன் கேரளாவிலிருந்து பெங்களூருக்கு காரில் சென்றார். சேலம் மாவட்டம், தலைவாசலைச் சேர்ந்த பாலாஜி (30) காரை ஓட்டினார்.
கிருஷ்ணகிரி அருகே மோட்டூர் என்னுமிடத்தில் கார் சென்ற போது, சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாரதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த முகமது பஷீர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநர் பாலாஜி, உமர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தகவல் அறிந்த போலீஸார், நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து கிருஷ்ணகிரி அணை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.