கிருஷ்ணகிரி

மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டம்

DIN

டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி,  பெல்லாரம்பள்ளி  கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பெல்லாரம்பள்ளி கிராமத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  டாஸ்மாக் மதுக் கடை திறக்கப்பட்டது. மதுக் கடையைத்  திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அப்போது,  ஒன்றரை  மாதத்தில்  கடையை  மாற்று இடத்துக்கு மாற்றப்படும் என அலுவலர்கள் அளித்த உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர்.
தொடர்ந்து இந்த டாஸ்மாக் மதுக் கடை செயல்பட்ட நிலையில்,  அரசு அலுவலர்கள் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த  கிராம மக்கள்,  டாஸ்மாக் மதுக் கடையை இடமாற்றம் செய்யக் கோரி  திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீஸார்,  நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று,  பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.  15 நாள்களில் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT