கிருஷ்ணகிரி

சீமைக் கருவேல மரங்கள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

தினமணி

ஊத்தங்கரையில் உலக நீர் தினத்தையொட்டி, சீமைக் கருவேல மரங்களை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
 பேரணிக்கு கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் பொ.அருண் தலைமை வகித்துப் பேரணியைத் தொடக்கி வைத்தார். ஊத்தங்கரை வருவாய் வட்டாட்சியர் சுப்பிரமணியம், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன் உள்பட அரசு அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.
 பேரணியில் நீரின் அவசியம், கருவேல மரங்களை அகற்றுவது குறித்தும் மாணவர்கள் தங்கள் கைகளில் பதாதைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பிச் சென்றனர். பேரூராட்சி அலுவலகப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT