சீரான குடிநீர் வழங்காத கெலமங்கலம் பேரூராட்சியைக் கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கெலமங்கலம் பேரூராட்சியில் மிகக் கடுமையான வறட்சியில் சீரான குடிநீர் வழங்காததைக் கண்டித்தும், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யாததைக் கண்டிததும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், முன்னாள் கெலமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் சாதிக் பாஷா, முன்னாள் கவுன்சிலர்கள் நாகராஜ், முனிகிருஷ்ணப்பா, புட்டராஜ், நாகபூஷணம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.