கிருஷ்ணகிரி

வேப்பனஅள்ளி அருகே ஏரி  உடைந்தது: பயிர்கள் சேதம்

DIN

வேப்பனஅள்ளி அருகே காட்டேரியில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் வெளியேறியதில் நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதம் அடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆவல்நத்தம் கிராமத்தின் அருகே உள்ள காட்டேரி நிரம்பியது. ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், ஏரியின் கல்வெட்டின் சுவர் இடிந்தது. இதனால், ஏரியிலிருந்து தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள விளை நிலங்கள், கோயில்கள் நீரில் முழ்கின. இதனால் நெல், சிறுதானிய பயிர்கள் சேதம் அடைந்தன. ஏரி உடைப்பு குறித்து தகவல் அறிந்த வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த அலுவலர்கள், பொதுமக்களின் உதவியுடன் மணல் மூட்டைகளை அடுக்கியும், ஜேசிபி இயந்திரம் மூலம் நீர் வெளியேறுவதை தடுக்கும் பணியில் விரைந்து ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT