கிருஷ்ணகிரி

பணிமனை விபத்து: கிருஷ்ணகிரியில் போக்குவரத்து ஊழியர்கள் அஞ்சலி

DIN

பொறையாரில் அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை கட்டடம் இடிந்து விழுந்ததில்  உயிரிழந்தோருக்கு கிருஷ்ணகிரியில் அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நாகை மாவட்டம், பொறையார் அரசு போக்குவரத்துக்கழகப் பணிமனை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஓட்டுநர்கள், நடத்துநர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.  இந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கிருஷ்ணகிரி புறநகர்ப் பேருந்து பணிமனை அருகே தொமுச, சி.ஐ.டி.யூ. ஏ.ஏ.எல்.எல்.எப். ஆகிய தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வுக்கு தொ.மு.ச பொதுச் செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.சி.ஐ.டி.யூ குணசேகரன், ஏ.ஏ.எல்.எல்.எப். பொன்னுசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT