பள்ளி மாணவி கடத்தல் : இளைஞர் கைது
பள்ளி மாணவியைக் கடத்தியதாக, இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பள்ளி மாணவியைக் கடத்தியதாக, இளைஞர் கைது செய்யப்பட்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள இருளப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் (21). இவர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் நிகழாண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ள பள்ளி மாணவியை அண்மையில் கடத்திச் சென்றாராம். புகாரின்பேரில், போக்ஸோ சட்டத்தின் கீழ் அ.பள்ளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து அய்யனாரை கைது செய்தனர்.