மணல் கடத்தல்: இளைஞர் கைது
மணல் கடத்தலில் ஈடுபட்டதாக, இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
மணல் கடத்தலில் ஈடுபட்டதாக, இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
போச்சம்பள்ளியை அடுத்த பண்ணந்தூரில் தென்பெண்ணையாற்று பகுதியில் பாரூர் காவல் நிலைய ஆய்வாளர் கபிலன் தலைமையிலான போலீஸார் ரோந்து சென்றார். அப்போது, செல்லகுட்டப்பட்டி செல்லும் சாலையில் மினி டெம்போவில் மணல் ஏற்றிய டெம்போவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சாதிநாயக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் தாமோதரன் (23) என்பவர் கைது செய்யப்பட்டார்.