கிருஷ்ணகிரி

மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் அளிப்பு

DIN

ஊத்தங்கரை பகல் நேர பராமரிப்பு மையத்தில் பயிலும்  மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு வட்டார வள மையப் பொறுப்பு மேற்பார்வையாளர் ஆர்.வசந்தி தலைமை வகித்தார். ஆண்கள் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் கு.கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு  ட்ரை சைக்கிள், வீல்சேர், ரோலோட்டர்,  காலிபர் உள்ளிட்ட உபகரணங்களை  வழங்கினார். நிகழ்ச்சியில்  ஒருங்கிணைப்பாளர் எம்.மேரி,  ஆசிரியப் பயிற்றுநர் பி.சிவபிரகாசம்,  மாற்றுத் திறனாளி மாணவர்களின் சிறப்பு ஆசிரியர்கள் சி.சுரேஷ்,  கே.கவிதா, பிசியோதெரபிஸ்ட் பூங்குழலி,  உதவியாளர் எம்.மல்லிகா மற்றும் பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

SCROLL FOR NEXT