கிருஷ்ணகிரி

மின் ஊழியர் வீட்டில் திருட்டு

DIN

ஊத்தங்கரையில் மின் ஊழியர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஊத்தங்கரை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார்.  இவர் ஊத்தங்கரையில்  மின்வாரிய ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன்  வெளியூர்  சென்றுவிட்டு திங்கள்கிழமை வீடு திரும்பினார். 
அப்போது, வீட்டின் பூட்டு  உடைக்கப்பட்டு வீட்டின்  பீரோவை உடைத்து அதில் இருந்த 7 பவுன் தங்க நகை, 900 கிராம் வெள்ளி, ரூ.5000 ரொக்கம் ஆகியவற்றை  மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து உதயகுமார் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் உதவி  ஆய்வாளர் அன்பழகன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT