ஒசூரில் பேருந்து மோதியதில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
தேன்கனிக்கோட்டை வட்டம், சி.திம்மனட்டியைச் சேர்ந்தவர் சின்னையா (65), கூலித் தொழிலாளி. இவர் ஒசூர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த போது, பேருந்து நிலையத்துக்குள் வந்த தமிழக அரசுப் பேருந்து அவர் மீது மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.