கிருஷ்ணகிரி

ஒசூர் தொகுதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அ.ம.மு.க. வேட்பாளர் புகழேந்தி

DIN

ஒசூர் தொகுதியில் வெற்றிபெற்றால் செய்ய இருக்கும் பணிகள் குறித்த தேர்தல் அறிக்கையை அ.ம.மு.க.வேட்பாளர் புகழேந்தி வெளியிட்டார்.
இதையடுத்து அவர் கூறியது:
 ஒசூர் தொழிலாளர்கள் நிறைந்த நகரமாக உள்ளது. இத்தொகுதியில் வாக்குக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டது. அதைத் தொழிலாளர்கள் வாங்காமல் திருப்பி அனுப்பி வைத்தனர். இந்தச் செயலை நான் பாராட்டுகிறேன். இது ஒசூர் மக்கள் தந்திருக்கும் பாடம். இது தமிழகம் முழுவதும் பரவ வேண்டும். ஆட்சியில் செய்த வளர்ச்சித் திட்டப் பணிகளைச் சொல்லி வாக்குச் சேகரிக்க முடியாமல், மத்தியில் பிரதமராக மோடி  வர வேண்டும் எனக் கூறி வாக்குச் சேகரித்து வருகின்றனர் என்றார். அப்போது, முன்னாள் கவுன்சிலர் மரேகவுடா, நகரச் செயலாளர் ஜெயச்சந்திரன்,   ஜான் திமோதி உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

ராபா எல்லையில் இஸ்ரேல் டாங்கிகள்: அதிகரிக்கும் போர்ப் பதற்றம்!

SCROLL FOR NEXT